என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி
Byமாலை மலர்15 Aug 2020 10:56 AM GMT (Updated: 15 Aug 2020 10:58 AM GMT)
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கடற்கரையோர கிராமங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு அருகில் கோடியக்கரை இருப்பதால் தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோரபகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழுமம் போலீசார், வேதாரண்யம் சட்டம்-ஒழுங்கு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆட்கள் வந்தாலும் அல்லது வெளிநாட்டு படகு நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் போலீசார்் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், புஷ்பவனம், செம்போடை, மேலும் வேதாரண்யம் தாலுக்காவிலுள்ள 11 சோதணை சாவடிகளிலும் வாகன தணிக்கையும் தீவிரமாக நடைபெறுகிறது.
சட்டம்-ஒழுங்கு போலீசார், கடலோர காவல்படை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என அனைத்து உளவுத்துறை போலீசார்களும், கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் தாலுகா கடற்கரையோர கிராமங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு அருகில் கோடியக்கரை இருப்பதால் தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோரபகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழுமம் போலீசார், வேதாரண்யம் சட்டம்-ஒழுங்கு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆட்கள் வந்தாலும் அல்லது வெளிநாட்டு படகு நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் போலீசார்் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், புஷ்பவனம், செம்போடை, மேலும் வேதாரண்யம் தாலுக்காவிலுள்ள 11 சோதணை சாவடிகளிலும் வாகன தணிக்கையும் தீவிரமாக நடைபெறுகிறது.
சட்டம்-ஒழுங்கு போலீசார், கடலோர காவல்படை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என அனைத்து உளவுத்துறை போலீசார்களும், கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X