என் மலர்

    செய்திகள்

    பாறை இடுக்கில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த கரடியை படத்தில் காணலாம்.
    X
    பாறை இடுக்கில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த கரடியை படத்தில் காணலாம்.

    கோத்தகிரி அருகே பாறை இடுக்கில் சிக்கி கரடி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோத்தகிரி அருகே பாறை இடுக்கில் சிக்கி கரடி பரிதாபமாக இறந்தது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே கப்பட்டி கிராமத்தில் இருந்து நாரகிரி செல்லும் சாலையில் உள்ள பள்ளியாடா கிராமத்தில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்றும் மதியம் 1 மணிக்கு பெரிய பாறை இடுக்கில் ஒரு கால் சிக்கி வெளியே வர முடியாமல் கரடி சத்தமிட்டபடி தவித்துக்கொண்டு இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த வனவர்கள் சசிகுமார், பெலிக்ஸ், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், சிவக்குமார், பூபதி அடங்கிய வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கரடி சிக்கி இருந்த பாறையை ஆய்வு செய்து, அந்த கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    கரடி தொடர்ந்து சத்தமிட்டபடி இருந்ததாலும், அது சிக்கிய பாறை அதிக எடை கொண்டது என்பதாலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அதிகாரி குருசாமி தபேலா, உதவி வன அதிகாரி சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கரடியை மீட்பது குறித்து ஆலோசனை செய்தனர். பின்னர் அந்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் கீழ் கோத்தகிரி கால்நடை மருத்துவர் ரேவதி, மசினகுடி கால்நடை மருத்துவர் கோகுலன், ஊட்டி கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் அந்த கரடி பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இறந்தது 5 வயதான பெண் கரடி ஆகும். பாறை இடுக்கில் இருந்த எறும்புகளை சாப்பிட வந்தபோது சிக்கிக்கொண்டது. 5 மணி நேரம் தண்ணீர், உணவு இல்லாமல் கரடி மிகவும் சோர்வடைந்த நிலையில் அது இறந்து விட்டது என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கரடியை மீட்க வனத்துறையினர் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் அந்த கரடி உயிரிழந்துவிட்டது என்றனர்.
    Next Story
    ×