என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்14 Aug 2020 10:08 AM GMT (Updated: 14 Aug 2020 10:08 AM GMT)
மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தடுப்பினையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வகையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகள், முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற்றுள்ளனர். இந்த நிவாரணத்தொகை அரசு ஊழியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வருமான உச்சவரம்பின்றி வழங்கப்படுகிறது.
எனவே இதுவரை ரூ.1,000 நிவாரணத்தொகை பெறாத சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வருகிற 31-ந் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் பகுதியினை சேர்ந்த ஊராட்சி எழுத்தர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை ஒப்படைத்து ரூ.1,000 நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தடுப்பினையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வகையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகள், முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற்றுள்ளனர். இந்த நிவாரணத்தொகை அரசு ஊழியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வருமான உச்சவரம்பின்றி வழங்கப்படுகிறது.
எனவே இதுவரை ரூ.1,000 நிவாரணத்தொகை பெறாத சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வருகிற 31-ந் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் பகுதியினை சேர்ந்த ஊராட்சி எழுத்தர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை ஒப்படைத்து ரூ.1,000 நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X