என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கூடுவாஞ்சேரியில் திருட்டு வழக்கில் மகன் சிக்கியதால் அவமானத்தில் தந்தை தற்கொலை

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் திருட்டு வழக்கில் மகன் சிக்கியதால் அவமானத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் துலுக்காணத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவரது மகன் நீலகண்டன். இவரை சோமங்கலம் போலீசார் ஒரு திருட்டு வழக்கில் பிடித்து சென்றனர்.

    இதை கேள்விப்பட்ட உடன் தனது மகனின் இந்த செய்கையால் அவமானம் தாங்க முடியாத குமார் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×