என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
Byமாலை மலர்10 Aug 2020 10:00 AM GMT (Updated: 10 Aug 2020 10:00 AM GMT)
நாகை மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
பொறையாறு:
ஆகஸ்டு மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்தநிலையில் நாகை மாவட்டம் எல்லை முடிவு, காரைக்கால் மாவட்டம் எல்லை ஆரம்பம் ஆகிய இருமாவட்ட எல்லையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்ட எல்லையான பொறையாறு அருகே நண்டலாறு சோதனை சாவடியில் பொறையாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இ-பாஸ் அனுமதி இல்லாமல் வரும் கனரக வாகனங்கள், கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், பாதசாரிகள் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு சாராயம் வாங்க செல்லும் மதுப்பிரியர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆகஸ்டு மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்தநிலையில் நாகை மாவட்டம் எல்லை முடிவு, காரைக்கால் மாவட்டம் எல்லை ஆரம்பம் ஆகிய இருமாவட்ட எல்லையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்ட எல்லையான பொறையாறு அருகே நண்டலாறு சோதனை சாவடியில் பொறையாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இ-பாஸ் அனுமதி இல்லாமல் வரும் கனரக வாகனங்கள், கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், பாதசாரிகள் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு சாராயம் வாங்க செல்லும் மதுப்பிரியர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X