search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சம் - 66 பேருக்கு கொரோனா தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 1,012 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 14 பேர் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 998 ஆக மாறியது. இந்தநிலையில் நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,064 ஆக உயர்ந்தது.

    இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு அண்ணாநகர், வில்லரசம்பட்டி மதுரைவீரன் நகர், நேதாஜிரோடு ஆலமரத்து வீதி, அங்காளம்மன் கோவில் வீதி, வைராபாளையம், சின்னவலசு, சூரம்பட்டி, பெரியார்நகர், ஜானகிஅம்மாள் லேஅவுட் பகுதி, பெரியவலசு, வீரப்பன்சத்திரம் பாரதிதாசன்வீதி, முத்தம்பாளையம், 46 புதூர் ஸ்ரீலட்சுமி கார்டன், லெனின் வீதி, கணபதிநகர், அகில்மேடுவீதி, அசோகபுரம் நேருவீதி, ஆர்.என்.புதூர், கிருஷ்ணம்பாளையம், மூலப்பாளையம் விநாயகர்கோவில் வீதி, திண்டல், பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதேபோல் அந்தியூர், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி, சித்தோடு ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 367 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கடந்த 5 நாட்களில் மட்டும் 235 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது வரை மொத்தம் 680 பேர் குணமடைந்து உள்ளார்கள். மாவட்டத்தில் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 55 பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் விவரம் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் அவரது பாதிப்பு விவரம் திருப்பூர் மாவட்ட பட்டியலில் உள்ளது. எனவே அந்த பெண்ணின் இறப்பு விவரம் விரைவில் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்”, என்றார்.

    இதற்கிடையே ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஈரோடு மேற்கு கோட்ட மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வரும் முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய 2-ம் பகுதியை சேர்ந்த 50 வயது நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீடு உள்ள பகுதி மற்றும் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    Next Story
    ×