என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்10 Aug 2020 9:39 AM GMT (Updated: 10 Aug 2020 9:39 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 948 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுடன் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த தேனாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், 2 சிறுவர்கள், 3 பெண்கள், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஊட்டி செவிலியர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண், காந்தல் கீழ் போகி தெருவை சேர்ந்த ஒரு ஆண், கோவை சென்று திரும்பியவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஒரு பெண், ஜெகதளா அருகே காரைக்கொரையை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு 958 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 803 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் இறந்து விட்டனர். 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 948 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுடன் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த தேனாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், 2 சிறுவர்கள், 3 பெண்கள், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஊட்டி செவிலியர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண், காந்தல் கீழ் போகி தெருவை சேர்ந்த ஒரு ஆண், கோவை சென்று திரும்பியவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஒரு பெண், ஜெகதளா அருகே காரைக்கொரையை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு 958 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 803 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் இறந்து விட்டனர். 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X