search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்மாற்றியை சீரமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
    X
    மின்மாற்றியை சீரமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    சின்னநாகலூரில் மின்மாற்றியை சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

    சின்னநாகலூரில் மின்மாற்றியை சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் அருகே உள்ள சின்னநாகலூர் கிராமத்தில் 17 விவசாயிகள் மின் இணைப்பு பெற்று மின் மோட்டார் மூலம் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மின்மாற்றி பழுதானதால், மின்சாரம் தடைபட்டுள்ளது.

    இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில், விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதாக கூறி மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் அணுகியுள்ளனர். ஆனால் மின்மாற்றியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைக்கக்கோரி மின்மாற்றி உள்ள இடத்தில், விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற கயர்லாபாத் போலீசார், மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×