என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை- புதுவை கோர்ட்டு தீர்ப்பு
Byமாலை மலர்7 Aug 2020 9:17 AM GMT (Updated: 7 Aug 2020 9:17 AM GMT)
சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 8.4.2019 அன்று இரவு வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் கோட்டகுப்பம் முகமது யூனுஸ் என்பவரின் மகன் உசேன் (வயது 22) என்பவர் அங்கு வந்தார்.
அவர் அந்த சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்திக்கொண்டு ஆரோவில் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவர் அந்த சிறுவனை வீட்டின் முன்பு கொண்டு வந்து விட்டுச்சென்றார். அந்த சிறுவன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தான்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், ரமேஷ் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட உசேனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தனபால் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து உசேனை போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 8.4.2019 அன்று இரவு வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் கோட்டகுப்பம் முகமது யூனுஸ் என்பவரின் மகன் உசேன் (வயது 22) என்பவர் அங்கு வந்தார்.
அவர் அந்த சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்திக்கொண்டு ஆரோவில் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவர் அந்த சிறுவனை வீட்டின் முன்பு கொண்டு வந்து விட்டுச்சென்றார். அந்த சிறுவன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தான்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், ரமேஷ் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட உசேனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தனபால் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து உசேனை போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X