என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரியில் மேலும் 37 பேருக்கு கொரோனா - பாதிப்பு 849 ஆக உயர்வு
Byமாலை மலர்4 Aug 2020 12:10 AM GMT (Updated: 4 Aug 2020 12:10 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 812 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 812 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த குருத்துக்குளியை 17 ஆண்கள், 4 பெண்கள், ஒரநள்ளி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த கடநாட்டை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி எச்.எம்.டி. பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் தொடர்பில் பிக்கட்டியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகை தந்த டிரைவரின் தொடர்பில் இருந்த ஜக்கலோரையை சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண், ஓரநள்ளியை சேர்ந்த ஒரு ஆண், கோவை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி லிபர்டி தியேட்டர் பகுதியை சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் மார்க்கெட் பகுதிக்கு வருகை தந்த வெளிமாவட்ட டிரைவரின் தொடர்பில் இருந்த குன்னூர் கிளிஞ்சடாவை சேர்ந்த ஒரு பெண், ராஜாஜி நகரை சேர்ந்த ஒரு ஆண், கரன்சியை சேர்ந்த ஒரு சிறுவன், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெலிங்டனுக்கு வருகை தந்த ஒரு ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கோவை சென்று வந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த ஊட்டி கிராண்ட் லைனை சேர்ந்த ஒரு ஆண், கோவை மாவட்டத்திலிருந்து வருகை புரிந்தவருடன் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த குன்னூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி எச்.பி.எப். பகுதியை சேர்ந்த ஒரு பெண், கேரள மாநிலத்திலிருந்து சேரங்கோடு ஊராட்சி காளியோடு பகுதிக்கு வருகை தந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 849 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 700 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 147 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 812 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த குருத்துக்குளியை 17 ஆண்கள், 4 பெண்கள், ஒரநள்ளி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த கடநாட்டை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி எச்.எம்.டி. பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் தொடர்பில் பிக்கட்டியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகை தந்த டிரைவரின் தொடர்பில் இருந்த ஜக்கலோரையை சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண், ஓரநள்ளியை சேர்ந்த ஒரு ஆண், கோவை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி லிபர்டி தியேட்டர் பகுதியை சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் மார்க்கெட் பகுதிக்கு வருகை தந்த வெளிமாவட்ட டிரைவரின் தொடர்பில் இருந்த குன்னூர் கிளிஞ்சடாவை சேர்ந்த ஒரு பெண், ராஜாஜி நகரை சேர்ந்த ஒரு ஆண், கரன்சியை சேர்ந்த ஒரு சிறுவன், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெலிங்டனுக்கு வருகை தந்த ஒரு ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கோவை சென்று வந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த ஊட்டி கிராண்ட் லைனை சேர்ந்த ஒரு ஆண், கோவை மாவட்டத்திலிருந்து வருகை புரிந்தவருடன் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த குன்னூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி எச்.பி.எப். பகுதியை சேர்ந்த ஒரு பெண், கேரள மாநிலத்திலிருந்து சேரங்கோடு ஊராட்சி காளியோடு பகுதிக்கு வருகை தந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 849 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 700 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 147 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X