search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்வர் நாராயணசாமி
    X
    புதுவை முதல்வர் நாராயணசாமி

    புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் அமலாகுமா?: முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில்

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று கூறியதாவது:-

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    கொரோனா சூழலில் மாணவர்கள் கல்வி பயில மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும்.

    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×