search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    நீலகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு - தொற்று எண்ணிக்கை 735 ஆக உயர்வு

    நீலகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரின் பெயர்கள் வெளிமாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு திருத்திய பட்டியல் 724 ஆக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த ஊட்டி அருகே கல்லட்டியை சேர்ந்த ஒரு பெண், கோவை சென்று வந்தவர்களின் தொடர்பில் இருந்த மஞ்சகொம்பையை சேர்ந்த 4 பெண்கள், ஒரு ஆண், கோவைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று வந்தவர்களின் தொடர்பில் இருந்த கடநாட்டைசேர்ந்த ஒரு ஆண், கோத்தகிரி அருகே மரலக்கம்பையை சேர்ந்த ஒரு பெண், அதிகரட்டியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெடுகுளாவை சேர்ந்த ஒரு பெண், கோவை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த நெடுகுளாவை சேர்ந்த ஒரு ஆண், சேலம் சென்று திரும்பிய கோத்தகிரி கோட்டஹால் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

    இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு 735 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 581 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×