என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில், ஒரே நாளில் இளம்பெண் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்30 July 2020 9:12 AM GMT (Updated: 30 July 2020 9:12 AM GMT)
நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் இளம்பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் இளம்பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். 9 வியாபாரிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டதால் பரவை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 601 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நாகை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டதால், தொற்று எண்ணிக்கை 602 ஆக மாறியது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் பரவை காய்கறி மார்க்கெட்டில் 9 வியாபாரிகளுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. மேலும் ஆயுதப்படையை சேர்ந்த 9 போலீசார், 4 கர்ப்பிணி பெண்கள், 3 செவிலியர்கள் உள்பட 55 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 360 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் சீர்காழி ஆருர் மெயின் ரோட்டை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், திட்டச்சேரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் தலைஞாயிறு தாலுகா திருமுலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் இளம்பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். 9 வியாபாரிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டதால் பரவை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 601 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நாகை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டதால், தொற்று எண்ணிக்கை 602 ஆக மாறியது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் பரவை காய்கறி மார்க்கெட்டில் 9 வியாபாரிகளுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. மேலும் ஆயுதப்படையை சேர்ந்த 9 போலீசார், 4 கர்ப்பிணி பெண்கள், 3 செவிலியர்கள் உள்பட 55 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 360 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் சீர்காழி ஆருர் மெயின் ரோட்டை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், திட்டச்சேரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் தலைஞாயிறு தாலுகா திருமுலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X