என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
நாகை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது. நாகை மாவட்டத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 523 ஆக இருந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியான நிலையில் 302 பேர் குணமடைந்துள்ளனர். 229 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






