என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அதிர்ச்சியில் பலி
Byமாலை மலர்21 July 2020 9:14 AM GMT (Updated: 21 July 2020 9:14 AM GMT)
காஞ்சீபுரத்தில் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம் அமுதுபடி பின்தெருவை சேர்ந்தவர் ராமு யாதவ் (வயது 79). கடலூர் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ராஜேஸ்வரி (67). இவர்களுக்கு வேலு, வரதராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் வரதராஜன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், ராமு யாதவ் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சியடைந்த ராமு யாதவ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் அமர்ந்தபடியே எந்தவித அசைவுமின்றி காணப்பட்டார். இதை அறிந்த அருகாமையில் வசித்து வந்த அவரது மகன் உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ராமு யாதவ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்ன காஞ்சீபுரம் அமுதுபடி பின்தெருவை சேர்ந்தவர் ராமு யாதவ் (வயது 79). கடலூர் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ராஜேஸ்வரி (67). இவர்களுக்கு வேலு, வரதராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் வரதராஜன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், ராமு யாதவ் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சியடைந்த ராமு யாதவ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் அமர்ந்தபடியே எந்தவித அசைவுமின்றி காணப்பட்டார். இதை அறிந்த அருகாமையில் வசித்து வந்த அவரது மகன் உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ராமு யாதவ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X