search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    வாகன ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    சாலை வரியை ரத்து செய்யக்கோரி - வாகன ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    அண்ணாமலைநகர் அருகே சாலை வரியை ரத்து செய்யக்கோரி வாகன ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அண்ணாமலைநகர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் நேற்று சி.முட்லூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார். செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள் நைனாமுகமது, ஜோதிராஜ், சையத்முகமது, தனசிங், சக்திவேல், திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் சங்க நிர்வாகிகள், வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் அனைத்து மோட்டார் சம்பந்தப்பட்ட சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு, ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி, மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×