search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதிய உச்சமாக ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று

    புதிய உச்சமாக ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 673 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 387 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். மேலும் 278 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

    அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த 46 வயது பெண்ணுக்கு கடந்த 11-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதயநோய் பிரச்சினைக்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரிமளம் ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களுக்கு அமெரிக்கா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அரிமளம், கடியாப்பட்டி, கே.புதுப்பட்டி ஆகிய ஊர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 24 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×