என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்று இல்லாத பெண்ணை கொரோனா வார்டுக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
Byமாலை மலர்13 July 2020 1:55 PM GMT (Updated: 13 July 2020 1:55 PM GMT)
கறம்பக்குடியில் தொற்று இல்லாத பெண்ணை கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நள்ளிரவில் அவரை திருப்பி அனுப்பினர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவருடைய மனைவி, மகன், மகளுக்கும் தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்களை நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண்ணையும் ஆம்புலன்சில் ஏற்றி புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனைக்கு சென்ற பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலை சரி பார்த்தபோது, நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கு தொற்று இல்லாத நிலையில், அவரை அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை நள்ளிரவில் ஊருக்கு திரும்பி செல்லுமாறு ஊழியர்கள் அனுப்பிவிட்டனர்.
பஸ் இல்லாத நிலையில் புதுக்கோட்டையில் தவித்த அந்த பெண், பின்னர் உறவினருக்கு தகவல் தெரிவித்து கார் ஏற்பாடு செய்து, அதில் ஊருக்கு திரும்பினார். தொற்று இல்லாத பெண்ணை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் ஒரே ஆம்புலன்சில் அழைத்து சென்றது கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவருடைய மனைவி, மகன், மகளுக்கும் தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்களை நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண்ணையும் ஆம்புலன்சில் ஏற்றி புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனைக்கு சென்ற பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலை சரி பார்த்தபோது, நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கு தொற்று இல்லாத நிலையில், அவரை அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை நள்ளிரவில் ஊருக்கு திரும்பி செல்லுமாறு ஊழியர்கள் அனுப்பிவிட்டனர்.
பஸ் இல்லாத நிலையில் புதுக்கோட்டையில் தவித்த அந்த பெண், பின்னர் உறவினருக்கு தகவல் தெரிவித்து கார் ஏற்பாடு செய்து, அதில் ஊருக்கு திரும்பினார். தொற்று இல்லாத பெண்ணை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் ஒரே ஆம்புலன்சில் அழைத்து சென்றது கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X