search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஹாலோகிராம் மோசடி வழக்கில் டிரைவர் கைது

    ஹாலோகிராம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூரில் மங்கலம் சாலையில் தனியார் மதுபான ஆலை உள்ளது. இங்கு போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி மோசடியில் ஈடுபட்டதாக ஆலையின் உரிமையாளர் சேகர், பொதுமேலாளர் பொன்னா ராவ், கலால்துறை வருவாய் அதிகாரி அருண் பிரசாத், மதுபான ஆலை உரிமையாளர் டிரைவர் கார்த்திகேயன் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் ஆலையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். பொதுமேலாளர் பொன்னாராவ், கலால்துறை வருவாய் அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களும் ஜாமீன் பெற்றனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் கார்த்திகேயனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். அவரை கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×