search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    நீலகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேருக்கு கொரோனா

    நீலகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஊட்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த எல்லநள்ளியை சேர்ந்த 45 வயதான ஆண், தும்மனட்டியை சேர்ந்த 38 வயதான ஆண், சென்னை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வந்த எமரால்டு பகுதியை சேர்ந்த 31 வயதான லாரி டிரைவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வருகை புரிந்த ஒருவர் மூலம் ஊட்டி அருகே மேல் கவ்வட்டியை சேர்ந்த 36 வயதான பெண், 15 வயதான சிறுமி ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதிக்கு வந்த குடும்ப உறுப்பினர் மூலம் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த குடும்பத்தை சேர்ந்த 64 வயதான பெண், 42 வயதான பெண், 45 வயதான ஆண், 19 வயதான ஆண், 13 வயதான சிறுமி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 160 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதம் உள்ள 111 பேரில் 74 பேர் ஊட்டி அரசு மருத்துவமனையிலும், 7 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×