search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பறவைகள்
    X
    ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பறவைகள்

    கிருமாம்பாக்கம் ஏரிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

    கிருமாம்பாக்கம் ஏரிக்கு ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டெலிகான் பறவைகளும், உள்நாட்டு இனங்களான கொக்கு, நாரை, நத்தை கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளும் வந்த வண்ணம் உள்ளன.
    பாகூர்:

    புதுவை மாநிலம் முழுவதும் உள்ள 84 ஏரிகளில் பாகூர் பகுதியில் மட்டும் 24 ஏரிகள் அமைந்துள்ளன. இங்கு மழைநீரை தேக்கி வைத்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஏரிகளில் தண்ணீர் இருக்கும் போது வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கம் மற்றும் உணவிற்காக படையெடுத்து வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் அனைத்து ஏரிகளும் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் பறவைகள் உணவு தேடி வேறுபகுதிக்கு சென்றுவிட்டன. ஒருசில வெளிநாட்டு பறவைகள் மட்டும் சுற்றித்திரிந்து வருகின்றன.

    கிருமாம்பாக்கத்தில் உள்ள சின்ன-பெரிய ஏரிகளில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு உணவு தேடி ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டெலிகான் பறவைகளும், உள்நாட்டு இனங்களான கொக்கு, நாரை, நத்தை கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த பறவைகளை கண்டு கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரசித்து விட்டு செல்கின்றனர்.
    Next Story
    ×