search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்தவர் உள்பட 2 பேர் பலி - புதிதாக 39 பேருக்கு தொற்று

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 39பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிவகங்கையை சேர்ந்த 5 ஆண் மற்றும் 4 பெண்கள், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்நத 7 ஆண்கள், 8 பெண்கள், புதுவயலை சேர்ந்த ஒரு ஆண், விருதுநகரை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்நத ஒரு பெண், சிங்கம்புணரியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண், தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், திருப்புவனம் பகுதியை சேர்ந்த ஒரு பெண், வரிச்சியூரை சேர்ந்த ஒரு ஆண் உள்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் சிவகங்கையை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்தபோது திடீரென உயிரிழந்தார். இவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
    Next Story
    ×