என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
Byமாலை மலர்28 Jun 2020 1:53 PM GMT (Updated: 28 Jun 2020 1:53 PM GMT)
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் 90 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல், பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரு சிலருக்கு அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது தவிர பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்களுக்கு பறக்கும்படை மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மூலம் தலா ரூ.50 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி எல்லையில் கமிஷனர் சரஸ்வதி அறிவுரைப்படி 3 குழுவினர் முகாமிட்டு, இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தவிர உரிய முறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. சுழற்சி முறையில் வாகன சோதனை நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.35,450 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என நீலகிரி மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மூலம் முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் 90 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல், பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரு சிலருக்கு அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது தவிர பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்களுக்கு பறக்கும்படை மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மூலம் தலா ரூ.50 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி எல்லையில் கமிஷனர் சரஸ்வதி அறிவுரைப்படி 3 குழுவினர் முகாமிட்டு, இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தவிர உரிய முறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. சுழற்சி முறையில் வாகன சோதனை நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.35,450 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என நீலகிரி மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மூலம் முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X