என் மலர்
செய்திகள்

சிதம்பரம் வீனஸ் பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
முதன்மை கல்வி அலுவலகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் விடைத்தாள்கள் ஒப்படைப்பு
கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடலூர்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 கடைசி தேர்வான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடத்தேர்வுகளும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாணவ- மாணவிகளின் தேர்ச்சியை கணக்கிடும் வகையில் ஏற்கனவே நடந்து முடிந்த காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை கொண்டு, அதில் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் வருகை பதிவேட்டை கணக்கிட்டு தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக மாணவர்களின் வருகை பதிவேடு அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 4 கல்வி மாவட்ட அலுவலர்கள் தலைமையில் ஆசிரியர்கள் அடங்கிய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள், மதிப்பெண் பட்டியல்கள், தேர்ச்சி பட்டியல் மற்றும் பாடவாரியான மதிப்பெண் பதிவேடு ஆகியவை பெறப்படுகின்றன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களின் விடைத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து கோப்புகளும் பெறப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீத பள்ளிகள் மாணவர்களின் விடைத்தாள்களை ஒப்படைத்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பள்ளிகளும் விடைத்தாள்களை ஒப்படைத்து விடும் என்றார்.
சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் விடைத்தாள்களை ஒப்படைப்பதற்காக சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து முகாம் அலுவலர் மோகன் மேற்பார்வையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களை வாங்கி சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 94 பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் விடைத்தாள்களையும், 51 பள்ளிகள் பிளஸ்-1 மாணவர்களின் விடைத்தாள்களையும் ஒப்படைத்துள்ளன. முன்னதாக பணிக்கு வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 கடைசி தேர்வான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடத்தேர்வுகளும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாணவ- மாணவிகளின் தேர்ச்சியை கணக்கிடும் வகையில் ஏற்கனவே நடந்து முடிந்த காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை கொண்டு, அதில் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் வருகை பதிவேட்டை கணக்கிட்டு தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக மாணவர்களின் வருகை பதிவேடு அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 4 கல்வி மாவட்ட அலுவலர்கள் தலைமையில் ஆசிரியர்கள் அடங்கிய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள், மதிப்பெண் பட்டியல்கள், தேர்ச்சி பட்டியல் மற்றும் பாடவாரியான மதிப்பெண் பதிவேடு ஆகியவை பெறப்படுகின்றன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களின் விடைத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து கோப்புகளும் பெறப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீத பள்ளிகள் மாணவர்களின் விடைத்தாள்களை ஒப்படைத்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பள்ளிகளும் விடைத்தாள்களை ஒப்படைத்து விடும் என்றார்.
சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் விடைத்தாள்களை ஒப்படைப்பதற்காக சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து முகாம் அலுவலர் மோகன் மேற்பார்வையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களை வாங்கி சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 94 பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் விடைத்தாள்களையும், 51 பள்ளிகள் பிளஸ்-1 மாணவர்களின் விடைத்தாள்களையும் ஒப்படைத்துள்ளன. முன்னதாக பணிக்கு வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.
Next Story






