என் மலர்
செய்திகள்

விண்ணப்பம்
மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்- அதிகாரி தகவல்
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) இருசக்கர மோட்டார் வாகனம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களில் 3,705 பேருக்கு 2020-21-ம் ஆண்டில் அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட உள்ளது.
வாகனம் சொந்த நிதியில், வங்கிக்கடன் மற்றும் ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாங்கலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை சேர்ந்த பெண்கள், விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக இருக்க கூடாது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார். விண்ணப்பிக்கும் போது எல்.எல்.ஆர். (ஓட்டுனர் பயிற்சி சான்று) சான்று பெற்றிருப்பது அவசியமாகும்.
விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்று, பணி செய்யும் மகளிர் என்பதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாங்க விரும்பும் இருசக்கர மோட்டார் வாகனத்திற்கான விலைப்புள்ளி அல்லது ஒப்படைப்பு விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்திலோ, நேரடியாகவும், பதிவு தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) இருசக்கர மோட்டார் வாகனம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களில் 3,705 பேருக்கு 2020-21-ம் ஆண்டில் அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட உள்ளது.
வாகனம் சொந்த நிதியில், வங்கிக்கடன் மற்றும் ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாங்கலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை சேர்ந்த பெண்கள், விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக இருக்க கூடாது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார். விண்ணப்பிக்கும் போது எல்.எல்.ஆர். (ஓட்டுனர் பயிற்சி சான்று) சான்று பெற்றிருப்பது அவசியமாகும்.
விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்று, பணி செய்யும் மகளிர் என்பதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாங்க விரும்பும் இருசக்கர மோட்டார் வாகனத்திற்கான விலைப்புள்ளி அல்லது ஒப்படைப்பு விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்திலோ, நேரடியாகவும், பதிவு தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story






