என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடி மோசடி
Byமாலை மலர்18 Jun 2020 11:45 AM GMT (Updated: 18 Jun 2020 11:45 AM GMT)
திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடிவரை மோசடி செய்யப்பட்டதாக போலீசில் வியாபாரிகள் நேற்று புகார் அளித்தனர்.
திருச்சி:
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு வந்து, புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘திருச்சி காந்திமார்க்கெட், தாராநல்லூர், இ.பி.ரோடு, தேவதானம், கருவாட்டுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளான எங்களிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி பணம் வசூல் செய்தார்.
நாங்கள் சில ஆண்டுகளாக சேமித்து வைத்து இருந்த பணத்தை அவரிடம் செலுத்தி வந்தோம். முழுத்தொகையை செலுத்திய பிறகு, எங்களுடைய சீட்டு தொகையை திரும்ப கேட்டபோது, தர மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசினார்.
இதுவரை ரூ.23 கோடி வரை வியாபாரிகளிடம் மோசடி செய்து இருக்கலாம் என தெரிகிறது. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்’’ என்று கூறி இருந்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு வந்து, புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘திருச்சி காந்திமார்க்கெட், தாராநல்லூர், இ.பி.ரோடு, தேவதானம், கருவாட்டுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளான எங்களிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி பணம் வசூல் செய்தார்.
நாங்கள் சில ஆண்டுகளாக சேமித்து வைத்து இருந்த பணத்தை அவரிடம் செலுத்தி வந்தோம். முழுத்தொகையை செலுத்திய பிறகு, எங்களுடைய சீட்டு தொகையை திரும்ப கேட்டபோது, தர மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசினார்.
இதுவரை ரூ.23 கோடி வரை வியாபாரிகளிடம் மோசடி செய்து இருக்கலாம் என தெரிகிறது. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்’’ என்று கூறி இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X