என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை மையம்
    X
    கொரோனா பரிசோதனை மையம்

    காட்டேரியில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்கா அருகில் பயணிகள் நிழற்குடையில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு பர்லியார் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதற்கு உதவியாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்கா அருகில் பயணிகள் நிழற்குடையில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களின் பயண விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும் உடல் வெப்ப பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இது தவிர சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
    Next Story
    ×