என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 105 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 105 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
சென்னை காசிமேட்டில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் பகுதிக்கு வந்தார். 30 வயது மதிக்கத்தக்க அந்த 5 மாத கர்ப்பிணியிடம் இருந்து சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் சென்னையில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஒருவர், மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பாரதியார் நகருக்கு வந்தார். பின்னர் சளி மாதிரி பரிசோதனை நடத்தியதில், அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் 2 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சோலூர்மட்டம், பாரதியார் நகர் ஆகிய 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாரதியார் நகரில் 60 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் உள்ளே செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. சோலூர்மட்டத்தில் 65 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. பாரதியார் நகரில் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 45 பேர், சோலூர்மட்டத்தில் கர்ப்பிணியுடன் தொடர்பில் இருந்த 60 பேர் என மொத்தம் 105 பேரிடம் இருந்து பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. பின்னர் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட. முடிவு வந்த பின்னர் மேலும் விவரங்கள் தெரியவரும்.
இ-பாஸ் பெறாமல் சென்னையில் இருந்து அந்த வியாபாரி லாரியில் கோவைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அரசு பஸ்சில் குன்னூர் வழியாக மஞ்சூருக்கு சென்று உள்ளார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கும், முடிதிருத்தம் செய்ய சலூன் கடைக்கும் சென்று வந்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்ததால், தனது நண்பர்களுடன் கலந்து பேசியுள்ளார். இதனால் பிறருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னை காசிமேட்டில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் பகுதிக்கு வந்தார். 30 வயது மதிக்கத்தக்க அந்த 5 மாத கர்ப்பிணியிடம் இருந்து சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் சென்னையில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஒருவர், மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பாரதியார் நகருக்கு வந்தார். பின்னர் சளி மாதிரி பரிசோதனை நடத்தியதில், அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் 2 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சோலூர்மட்டம், பாரதியார் நகர் ஆகிய 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாரதியார் நகரில் 60 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் உள்ளே செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. சோலூர்மட்டத்தில் 65 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. பாரதியார் நகரில் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 45 பேர், சோலூர்மட்டத்தில் கர்ப்பிணியுடன் தொடர்பில் இருந்த 60 பேர் என மொத்தம் 105 பேரிடம் இருந்து பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. பின்னர் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட. முடிவு வந்த பின்னர் மேலும் விவரங்கள் தெரியவரும்.
இ-பாஸ் பெறாமல் சென்னையில் இருந்து அந்த வியாபாரி லாரியில் கோவைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அரசு பஸ்சில் குன்னூர் வழியாக மஞ்சூருக்கு சென்று உள்ளார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கும், முடிதிருத்தம் செய்ய சலூன் கடைக்கும் சென்று வந்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்ததால், தனது நண்பர்களுடன் கலந்து பேசியுள்ளார். இதனால் பிறருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Next Story






