என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு தொழில் அதிபர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்11 Jun 2020 9:44 AM GMT (Updated: 11 Jun 2020 9:44 AM GMT)
கொரோனாவுக்கு காரைக்குடியை சேர்ந்த தொழில் அதிபர் பலியானார். இவர்கள் காரைக்குடி, முதுகுளத்தூரை சேர்ந்தவர்கள் ஆவர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சொந்த ஊராகக் கொண்ட 51 வயது தொழில் அதிபர் சென்னை எழும்பூரில் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். அவர் கடந்த சில தினங்கள் முன்பு சென்னையில் இருந்து காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
இதற்கிடையே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவர் காரைக்குடி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைபெற்று வந்த அவர் நேற்று அதிகாலை 3 மணிஅளவில் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் முன்னிலையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காரைக்குடி கழனிவாசல் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த கீரனூரை சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 8-ந் தேதி சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்தநிலையில் அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சொந்த ஊராகக் கொண்ட 51 வயது தொழில் அதிபர் சென்னை எழும்பூரில் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். அவர் கடந்த சில தினங்கள் முன்பு சென்னையில் இருந்து காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
இதற்கிடையே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவர் காரைக்குடி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைபெற்று வந்த அவர் நேற்று அதிகாலை 3 மணிஅளவில் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் முன்னிலையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காரைக்குடி கழனிவாசல் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த கீரனூரை சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 8-ந் தேதி சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்தநிலையில் அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X