search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம் - கோப்புப்படம்
    X
    ஆர்ப்பாட்டம் - கோப்புப்படம்

    கொரோனா நிவாரண தொகை வழங்க கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கொரோனா நிவாரண தொகை வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கொரோனா நிவாரண தொகையாக மத்திய அரசு சார்பில் ரூ.7ஆயிரத்து 500-ம், மாநில அரசின் சார்பில் ரூ.5ஆயிரம் வழங்க கோரி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் உலகநாதன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மானாமதுரையில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஆண்டி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், காளையார்கோவிலில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலும், மறவமங்கலத்தில் அப்துல்ரகுமான், திருச்செல்வம் ஆகியோர் தலைமையிலும், திருவேகம்புத்தூரில் பொன்னுச்சாமி, வேலு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    தேவகோட்டையில் மார்க்சிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு காமராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் மார்க்சிஸ்டு தாலுகா செயலாளர் சின்னகண்ணன், இந்திய கம்யூனிஸ்டு ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலும், கல்லலில் மார்க்சிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் குணாலன் ஆகியோர் தலைமையிலும், பட்டமங்கலத்தில் மார்க்சிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையிலும், திருப்பத்தூரில் மார்க்சிஸ்டு மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையிலும், இடையமேலூரில் முத்துக்கருப்பன், முருகன் ஆகியோர் தலைமையிலும், பூவந்தியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில், எஸ்.புதூரில் சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×