என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    ஆண்டிமடம், மீன்சுருட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
    ஆண்டிமடம்:

    ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கோதண்டராமன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆண்டிமடம், ஓலையூர், பாப்பாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்துர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன், ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி, மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புக்குடி, அழகர்கோவில், சலுப்பை, வெத்தியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கொல்லை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    Next Story
    ×