search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடைகளின் கதவை உடைத்துரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பொருட்கள் கொள்ளை - 3 பேர் கைது

    கடைகளின் கதவுகளை உடைத்து ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெரு என்.ஜி.ஓ. காலனியில் மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் கீழையூர் கடைவீதியில் பேக்கிரி கடை, நாகை பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவை உள்ளன. சம்பவத்தன்று மர்மநபர்கள் இந்த கடைகளின் கதவுகளை உடைத்து ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சிட்டு பிரகாஷ்(வயது 22), ஸ்டீபன்ராஜ்(24), முத்து என்கிற கலியபெருமாள்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×