search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புவனகிரி அருகே பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

    புவனகிரி அருகே பெண்ணை மிரட்டியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது தாய் தமிழ்மணி. அன்பரசன் வீட்டின் முன்பு புவனகிரி மஞ்சகுழி கிராமத்தை சேர்ந்தவர் அன்புகாந்தி (வயது 35). இவரது நண்பர் பார்த்தீபன் இருவரும் மதுபோதையில் ஆபாச வார்த்தையால் திட்டி கொண்டிருந்தனர்.

    அப்போது தமிழ்மணி அவர்களிடம் தட்டிகேட்டார். அன்புகாந்தி கீழே கிடந்த செங்கலை எடுத்து தமிழ்மணி தலையில் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அன்பரசன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்புகாந்தியை கைது செய்தனர்.
    Next Story
    ×