என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பந்தநல்லூரில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்- 4 பேர் கைது
கும்பகோணம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த வில்லியநல்லூரை சேர்ந்தவர் செல்வம் (30). இவர் தனது பைக்கில் மரசட்டங்களை ஏற்றி கொண்டு, குணதளபாடி சாலையில் திருப்பத்தில் சென்ற போது, சாலையில் அதே பகுதியை சேர்ந் குருமூர்த்தி மகன் விமல் (20) மீது மரச்சட்டம் உரசியது. இதனால் ஆத்திரமடைந்த, விமல், செல்வத்தின் பைக்கையும், மரச் சட்டங்களை பறித்து வைத்து கொண்டார்.
பின்னர், செல்வம், தனது உறவினர்களை அழைத்து வந்து, விமல் தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பைக்கையும், மரச் சட்டத்தையும், வாங்கி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த விமல் தரப்பினர், மன்னிப்பு கேட்காமல், பைக்கையும், மரச்சட்டத்தை எப்படி எடுத்து செல்லலாம் என்று கூறி, உறவினர்களுடன், செல்வம், வீட்டிற்கு சென்று தாக்கினர்.
பின்னர், விமல் தரப்பினர், நடந்து சென்றபோது, செல்வம் தரப்பினரும் சென்று தாக்கினர்.
இதுகுறித்து இருதரப் பினரும், பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், செல்வம் (30), விமல் (20), முத்து (23), அரவிந்த் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்