என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மதுக்கடை திறப்பால் மோதல் அதிகரிப்பு
Byமாலை மலர்26 May 2020 3:29 PM GMT (Updated: 26 May 2020 3:29 PM GMT)
புதுவையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மோதல் சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் புதுவையில் சாராயக்கடை உள்பட மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்ட சில நாட்கள் மட்டும் ஒரு சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர். அந்த மதுபாட்டில்களும் தீர்ந்து விடவே புதுவையில் மது விற்பனை முற்றிலும் இல்லாமல் இருந்தது.
மது விற்பனை இல்லாததால் புதுவையில் மோதல், திருட்டு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. மேலும் தற்கொலை போன்ற சம்பவங்களும் குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மோதல் சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.
பழைய சம்பவங்களை மனதில் வைத்து மது குடித்து விட்டு மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நேற்று மட்டும் இதுபோன்று புதுவையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. முதலியார்பேட்டை பகுதியில் நேற்று சவ ஊர்வலத்தின் போது மது குடித்து விட்டு நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ராசுஉடையார் தோட்டம் மற்றும் பிரான்சுவா தோட்டம் பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் மது குடித்து விட்டு மோதலில் ஈடுபட்டது. இதுபோல் குடிபோதையில் வில்லியனூர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுபோன்று புதுவை முழுவதும் நேற்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் புதுவையில் சாராயக்கடை உள்பட மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்ட சில நாட்கள் மட்டும் ஒரு சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர். அந்த மதுபாட்டில்களும் தீர்ந்து விடவே புதுவையில் மது விற்பனை முற்றிலும் இல்லாமல் இருந்தது.
மது விற்பனை இல்லாததால் புதுவையில் மோதல், திருட்டு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. மேலும் தற்கொலை போன்ற சம்பவங்களும் குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மோதல் சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.
பழைய சம்பவங்களை மனதில் வைத்து மது குடித்து விட்டு மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நேற்று மட்டும் இதுபோன்று புதுவையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. முதலியார்பேட்டை பகுதியில் நேற்று சவ ஊர்வலத்தின் போது மது குடித்து விட்டு நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ராசுஉடையார் தோட்டம் மற்றும் பிரான்சுவா தோட்டம் பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் மது குடித்து விட்டு மோதலில் ஈடுபட்டது. இதுபோல் குடிபோதையில் வில்லியனூர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுபோன்று புதுவை முழுவதும் நேற்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X