என் மலர்
செய்திகள்

கைது
சீர்காழி அருகே தெருவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதில் மோதல் - 14 பேர் கைது
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தெருவில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.கேக் வெட்டும் போது அங்கு கூடியிருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதை அதே தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து 14 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் 14 பேரையும் நீதிபதி தரணிதரன் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தெருவில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.கேக் வெட்டும் போது அங்கு கூடியிருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதை அதே தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து 14 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் 14 பேரையும் நீதிபதி தரணிதரன் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
Next Story






