என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் பாதிப்புக்குள்ளான சிறுவன் உள்பட 12 பேர் வீடு திரும்பினர்
Byமாலை மலர்23 May 2020 3:22 PM GMT (Updated: 23 May 2020 3:22 PM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உள்பட 12 பேர் நேற்று வீடு திரும்பினர்.
சிவகங்கை:
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர் திரும்பினர்.
அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே ஒரு சிறுமி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 9 வயது சிறுவன் உள்பட 12 பேர் பூரண குணமடைந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேலு, மருத்துவ அலுவலர் மீனா மற்றும் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இன்னும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர் திரும்பினர்.
அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே ஒரு சிறுமி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 9 வயது சிறுவன் உள்பட 12 பேர் பூரண குணமடைந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேலு, மருத்துவ அலுவலர் மீனா மற்றும் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இன்னும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X