search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மீன்சுருட்டி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 25 பேர் கைது

    மீன்சுருட்டி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தடையை மீறி அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீர சோழபுரம் கடைவீதியில் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களும், அருகில் உள்ள காமராஜ் நகர் தெருவை சேர்ந்தவர்களும் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கபிலன்(வயது 25), வீரபாண்டியன் (37), சுபாஷ்(19), அரள்வேந்தன்(22), சந்தோஷ்குமார்(19), ராஜசேகர்(24), சின்னசாமி (21),  ஹரிபிரசாத்(27) உள்பட 25 பேர் அடங்கிய இரு தரப்பினர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 25 பேரையும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×