என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திட்டக்குடி அருகே கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டிய வாலிபர் கைது

    திட்டக்குடி அருகே கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 28). இவர் ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் மது போதையில் நின்றார். அப்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சென்ற வையங்குடி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணியை வழிமறித்து தகராறு செய்து மிரடடினார்.

    இதுகுறித்து ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கலைவாணி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திவாகரை கைது செய்தனர்.
    Next Story
    ×