என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய தந்தை
Byமாலை மலர்20 May 2020 11:01 AM GMT (Updated: 20 May 2020 11:01 AM GMT)
ஜெயங்கொண்டம் அருகே மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் போதையில் தந்தை மோட்டார் சைக்கிள் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது மகன் அன்பு அமுதன்(4). நேற்று செல்வம் மோட்டார் சைக்கிளில் மகன் அன்பு அமுதனுடன் கடாரங்கொண்டான் கிராமத்தில் உறவினர் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மது அருந்திய அவர் மகனுடன் ஊருக்கு புறப்பட்டார். சிதம்பரம்-ஜெயங்கொண்டம் சாலை புதுச்சாவடி அருகே சென்றபோது செல்வத்திற்கு போதை தலைக்கேறவே சுய நினைவை இழந்து வாகனத்தை ஓட்டினார்.
அப்போது முன்னால் அமர்ந்திருந்த அன்பு அமுதன் தவறி கீழே விழுந்தான். அது கூட தெரியாமல் போதை மயக்கத்தில் செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். அந்த வழியாக சென்ற சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா, அன்பு அமுதனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். செல்வம் வீடு திரும்பாததால் அவரை தேடியபோது, குழந்தை விழுந்த அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி முட்புதரில் நினைவிழந்து கிடந்தார். அவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது மகன் அன்பு அமுதன்(4). நேற்று செல்வம் மோட்டார் சைக்கிளில் மகன் அன்பு அமுதனுடன் கடாரங்கொண்டான் கிராமத்தில் உறவினர் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மது அருந்திய அவர் மகனுடன் ஊருக்கு புறப்பட்டார். சிதம்பரம்-ஜெயங்கொண்டம் சாலை புதுச்சாவடி அருகே சென்றபோது செல்வத்திற்கு போதை தலைக்கேறவே சுய நினைவை இழந்து வாகனத்தை ஓட்டினார்.
அப்போது முன்னால் அமர்ந்திருந்த அன்பு அமுதன் தவறி கீழே விழுந்தான். அது கூட தெரியாமல் போதை மயக்கத்தில் செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். அந்த வழியாக சென்ற சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா, அன்பு அமுதனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். செல்வம் வீடு திரும்பாததால் அவரை தேடியபோது, குழந்தை விழுந்த அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி முட்புதரில் நினைவிழந்து கிடந்தார். அவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X