search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    ரூ.2000 செலவில் திருமணம் செய்த ஜோடி

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒட்டுமொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கண்ணன் கால் டாக்சி டிரைவராக உள்ளார். இவரும் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். திருமண பேச்சு ஆரம்பித்த நேரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு முடியும் வரை திருமணம் நடத்த வேண்டாம் என்று காதல் ஜோடி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்ததால் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

    இதன்படி வீட்டின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் திருமணம் முடிந்து விட்டது. இதில் பூமாலை, அர்ச்சனை பொருட்கள் உள்பட அனைத்தும் அடங்கும். பெண் வீட்டார் சார்பில் 2 பேர், ஆண் வீட்டார் சார்பில் 3 பேர் மற்றும் மணமக்கள் 2 பேர் உள்பட மொத்தம் 7 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்தே சென்று திருமணம் முடிந்த பிறகும் நடந்தே வீடு திரும்பி விட்டனர்.
    Next Story
    ×