என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வில்லியனூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

    வில்லியனூரில் தந்தை சொத்தை பிரித்து தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவாய் பேட்டை புதுநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. விவசாயி. இவரது மகன் பாலாஜி (வயது30). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜியை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    வேலைக்கு ஏதும் செல்லாத பாலாஜி மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்து வந்தார். இதற்கிடையே பாலாஜி தனது தந்தை கலியமூர்த்தியிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்தார். ஆனால் கலியமூர்த்தி சொத்தை பிரித்து தரவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவை கதிர்காமம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள். இவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் வினோதா (வயது 24). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக வினோதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் உடல்நிலை பாதிப்புக்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நோய்கொடுமை அதிகமானதால் மனமுடைந்த வினோதா வீட்டின் மாடியில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×