என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடைகளில் ரூ.4 ¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
Byமாலை மலர்18 May 2020 11:34 AM GMT (Updated: 18 May 2020 11:34 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.4¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
புதுக்கோட்டை:
டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையொட்டி மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர். நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரத்தில் ரூ.4 கோடியே 73 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்படவில்லை. குறிப்பிட்ட அளவில் மதுப்பிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிக அளவில் விற்பனையால் மதுபாட்டில்கள் காலியாகின. இதனால் குடோனில் இருந்து மதுபாட்டில்கள் எடுத்துவரப்பட்டு கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. அதனை டாஸ்மாக் கடைகளில் அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை திறப்பினால் பெட்டி கடைகளில் சிகரெட், பாட்டில் தண்ணீர், தின்பண்டங்கள், கிளாஸ் உள்ளிட்டவை விற்பனை சற்று அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையொட்டி மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர். நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரத்தில் ரூ.4 கோடியே 73 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்படவில்லை. குறிப்பிட்ட அளவில் மதுப்பிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிக அளவில் விற்பனையால் மதுபாட்டில்கள் காலியாகின. இதனால் குடோனில் இருந்து மதுபாட்டில்கள் எடுத்துவரப்பட்டு கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. அதனை டாஸ்மாக் கடைகளில் அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை திறப்பினால் பெட்டி கடைகளில் சிகரெட், பாட்டில் தண்ணீர், தின்பண்டங்கள், கிளாஸ் உள்ளிட்டவை விற்பனை சற்று அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X