search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம் அணிந்து வரும் பொதுமக்கள் - கோப்புப்படம்
    X
    முகக்கவசம் அணிந்து வரும் பொதுமக்கள் - கோப்புப்படம்

    ஆம்பூரில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம்

    ஆம்பூரில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு சட்டப் பிரிவுகளின்படி ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர்:


    திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் சில நிபந்தனைகளுடன் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.

    கடைகளில் பணிபுரிபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்.

    கிருமிநாசினியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். சமுக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருள்களை வழங்கக் கூடாது.

    பொதுமக்கள் வந்து செல்லும் கடை மற்றும் அந்த பகுதிகளை கிருமிநாசினி கொண்டு தினமும் 5 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

    வீட்டிலிருந்து வெளியில் செல்லும் பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

    விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கொள்ளை நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டங்களின்படி உரிய அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு சட்டப் பிரிவுகளின்படி ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×