என் மலர்
செய்திகள்

கலெக்டர் அருண்
4 ஆயிரம் விவசாயிகளுக்கு இ-பாஸ்- கலெக்டர் அருண் தகவல்
உழவர் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் பழ விற்பனை செய்ய கடந்த 2 நாட்களில் 3 ஆயிரத்து 920 விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் 13 பேர் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். 18 பேர் தனித்திருப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 ஆயிரத்து 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேவையின்றி சாலையில் சுற்றியதாக ஆயிரத்து 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உழவர் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் பழ விற்பனை செய்ய கடந்த 2 நாட்களில் 3 ஆயிரத்து 920 விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் 819 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






