என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்கராபரணி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது

    சங்கராபரணி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் மற்றும் கூடப்பாக்கம், பிள்ளையார் குப்பம், ஒதியம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலம் நடந்து வந்த இந்த மணல் திருட்டு தற்போது நூதன முறையில் மோட்டார் சைக்கிள் மூலம் சாக்குமூட்டைகளில் மணலை கடத்தி வந்து மறைவிடத்தில் குவித்து அதிக விலைக்கு விற்று வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களில் இதுபோன்று மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 4 பேரை வில்லியனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    அதோடு இந்த மணல் கடத்தலுக்கு தூண்டுதலாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு உத்தரவின் பேரில் போலீசார் வில்லியனூர் அருகே பத்துகண்ணு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பிள்ளையார்குப்பம் புதுநகரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 24) என்பதும், தப்பி ஓடியவர் தமிழரசன் என்பதும் தெரியவந்தது.

    மேலும் நடத்திய விசாரணையில் இவர்களை மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வரச்செய்தவர் ராமசாமி என்பதும், 50 மூட்டைகளில் மணல் கடத்தி வந்தால் ரூ.1500 தருவதாகவும் தெரிவித்ததால் மணலை கடத்தி வந்ததாக ஹரிஹரன் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர். அவரிடமிருந்து மணல் மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தமிழரசன், மணல் கடத்துவதற்கு தூண்டிய ராமசாமி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×