என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோக்கன் வினியோகம் - கோப்புப்படம்
    X
    டோக்கன் வினியோகம் - கோப்புப்படம்

    வேலூர் சத்துவாச்சாரியில் ரேசன் பொருட்கள் வாங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம்

    வேலூர் சத்துவாச்சாரியில் ரேசன் பொருட்கள் வாங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது
    வேலூர்:

    ரேசன் கடைகளில் பொருட்களை பெற வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும் மாநிலம் முழுவதும் டோக்கன் வழங்கும் பணி நடைபெறும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அந்த டோக்கன்களில் ரே‌ஷன் பொருட்கள், வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரேசன் அட்டைதாரர் டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் பொருட்கள் வழங்கப்படும் கடைக்குச் சென்று அவற்றைப் பெறலாம் என்று கூறியுள்ளனர். பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகர பகுதியில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்துள்ளனர். அதனைப் பெற்ற பொதுமக்கள் ரே‌ஷன் கடைகளில் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

    ஆனால் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வீடுவீடாக இதுவரை விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி ரேசன் கடை விற்பனையாளரிடம் கேட்டால் வீடு வீடாக வந்து டோக்கன் எதுவும் வழங்கப்படவில்லை. ரேசன் அட்டைதாரர்கள் கடைகளில் வந்து டோக்கன்களை பெற்று பொருட்கள் வாங்கிச் செல்லலாம் என கூறியதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அதிகரித்து சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் டோக்கன் வந்தபிறகு பொருட்களை வாங்கலாம் என வீடுகளிலேயே நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அரசு உத்தரவை மீறி டோக்கன் வீடு வீடாக விநியோகம் செய்யப்படாமல் கடைகளிலேயே இருந்துகொண்டு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். அறிவித்தபடி வீடுகள்தோறும் டோக்கன்கள் வழங்கி சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×