search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வில்லியனூர் அருகே சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது

    வில்லியனூர் அருகே அரியூர் சர்க்கரை ஆலை எதிரே சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் மற்றும் சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    மதுப்பான கடைகள் மூடப்பட்டதால் தற்போது சிலர் சாராயத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். போதைக்கு அடிமையான சிலர் கூடுதல் விலையையும் பொருட்படுத்தாமல் மதுபானம் எங்கும் கிடைக்காததால் சாராயத்தை நாடி செல்கின்றனர். அதுபோல் வில்லியனூர் அருகே அரியூர் சர்க்கரை ஆலை எதிரே சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது சர்க்கரை ஆலை எதிரே ஒரு சந்து பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து சாராய பாக்கெட் விற்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது56) என்பது, இவர் 100 மி.கிராம் கொண்ட சாராய பாக்கெட்டை ரூ250-க்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து லட்சுமணனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 12 பாக்கெட் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×