என் மலர்
செய்திகள்

கைது
வில்லியனூரில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வில்லியனூரில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
வில்லியனூர்:
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர். அவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.
அதுபோல் வில்லியனூர் பகுதியிலும் கள்ளத்தனமாக மதுப்பாட்டில் மற்றும் சாராயம் விற்ற பலரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். தற்போது வில்லியனூர் பகுதியில் மதுப்பாட்டில் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி போதைக்கு அடிமையான 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் வில்லியனூர் புதுநகர் சாமியார்தோப்பு பகுதியில் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த கதிர்(வயது19), சந்தோஷ்(21), அரவிந்த் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர். அவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.
அதுபோல் வில்லியனூர் பகுதியிலும் கள்ளத்தனமாக மதுப்பாட்டில் மற்றும் சாராயம் விற்ற பலரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். தற்போது வில்லியனூர் பகுதியில் மதுப்பாட்டில் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி போதைக்கு அடிமையான 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் வில்லியனூர் புதுநகர் சாமியார்தோப்பு பகுதியில் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த கதிர்(வயது19), சந்தோஷ்(21), அரவிந்த் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






