search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா பரிசோதனை

    மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை வந்த 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவாமல் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மிரட்டுநிலை கிராமத்தில் டெல்லி சென்று வந்த 23 வயதுடைய வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும் நல்ல நிலையில் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மேலும் பரவாமல் தடுக்க மிரட்டுநிலை கிராமத்தை சுற்றி 8 கி.மீ. அளவுக்கு வீடு, வீடாக கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மராட்டியத்தில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்கள் 15 பேர் தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு திரும்பினர். அவர்கள் அங்கிருந்து பொருட்கள் வரும் லாரியில் மாறி, மாறி வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 10 பேருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. மீதம் 5 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஏற்கனவே வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×